பாசத்தால் கல்லும் கறையும்
நேசத்தால் முள்ளும் மலராகும்
வலிகளில் வசிக்கும் வார்த்தைகளின் சுமை
இவ்வனைத்தும் தாங்குவது இதயத்தின் கடமை
மனிதனின் இதயமோ ஒரு கைப்பிடி அளவு
ஆனால் மனது படும் பாடால் உண்டாவது கண்ணீரின் செலவு
இறைவனின் படைப்பில் இது ஓர் ஆச்சர்யம்
விடையில்லா பல வினாக்களின் கைவண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment