Friday, December 21, 2007

கனவுகள் ஆயிரம் - 3

காலையில் உதிக்கும் கதிரவனும் நீயே!
பறந்தோடி வரும் பூவிதழ்களும் நீயே!
என்னுள் நின்று வாழும் அமிர்தமும் நீயே!
இப்படியோர் இன்ப வெள்ளம் ஏனடி தாயே?

உன் கூந்தல் என் வானத்தின் காற்றோ?
உன் உதடுகள் என் மனக்கடலின் சுழலோ?
உயிரூற்றி உறவாட வந்தாய்,
கண் பேச்சில் என் உணர்வுகளைப்பரித்தாய்,
அருவியாக நீ வரும் நாளை நோக்கி காத்திருந்தேன்...
ஏன் இந்த அன்புத்தொல்லையடி பெண்ணே?

உன் உச்சரிப்புகளே என் செவியின் இசை!
உன் நடையே என் கடலின் அலை!
வெட்கத்தால் மறைந்து நின்று என்னை பார்த்தாய்,
ஓர் நொடியினிலே என் நினைவுகளை மறக்கச் செய்தாய்,
புயலாக என் வாழ்வில் வந்தாடிய உன் நிழல்...
என்று என் கறை கடக்குமோ பெண்ணே?

No comments: