கதிர்களோடு உதிக்கும் சூரியனின் வெளிச்சம் என் கண்களுக்குத் தெரியவில்லை,
பனியோடு மலரும் மொட்டின் வாசம் எனக்கு மணக்கவில்லை,
உறக்கம் கலைக்க முழங்கும் சங்கின் ஒலிவரிசை எனக்கு கேட்கவில்லை,
தாகம் தீர்க்க குடிக்கும் நீரின் இனிமையை நான் சுவைக்கவில்லை,
சுகமான தாலாட்டிலுள்ள சிலிர்ப்பூட்டும் ஸ்பரிஸங்களையும் நான் உணரவில்லை.
மொத்தத்தில் செயல்படாமல் வசித்ததேன் மனம்...
உன்னினைப்பினில் ஆழ்ந்தே !
Tuesday, October 7, 2008
Monday, October 6, 2008
கனவுகள் ஆயிரம் - 7
துள்ளித் திறிந்த காலங்கள் சில ...
துன்பங்கள் தாங்கி நின்ற நாட்கள் பல ...
நாம் சேர்ந்து கழித்த நேரத்தின் நீளம் நேற்று வரை நான் பெரிதாக உணரவில்லை.
ஆனால் உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியிலும்,
நிஜங்கள் கூட என் கண்களுக்கு நிழல்கலாகத் தெரிகின்றதே!!!
துன்பங்கள் தாங்கி நின்ற நாட்கள் பல ...
நாம் சேர்ந்து கழித்த நேரத்தின் நீளம் நேற்று வரை நான் பெரிதாக உணரவில்லை.
ஆனால் உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியிலும்,
நிஜங்கள் கூட என் கண்களுக்கு நிழல்கலாகத் தெரிகின்றதே!!!
Subscribe to:
Posts (Atom)