Thursday, December 20, 2007

கனவுகள் ஆயிரம் - 2

அபினயங்களால் வரைந்த நாட்டியம்,
ஜதிகளால் வரைந்த மெட்டு,
ஸ்வரங்களால் வரைந்த இசை,
சுவடுகளால் வரைந்த ஓலை,
கொடிகளால் வரைந்த சோலை,
இலைகளால் வரைந்த கிளைகள்,
கிளைகளால் வரைந்த மரங்கள்,
இதழ்களால் வரைந்த பூக்கள்,
பூக்களால் வரைந்த மாலை,
சொற்களால் வரைந்த வார்த்தைகள்,
வார்த்தையால் வரைந்த மொழி,
இதழ்களால் வரைந்த உச்சரிப்பு,
கரங்களால் வரைந்த கருணை,
பார்வையால் வரைந்த பாசம்,
பாசத்தால் வரைந்த சொந்தம்,
மனதால் வரைந்த உணர்வுகள்,
உணர்வுகளால் வரைந்த காதல்,
உறங்க சாய்ந்தேனவள் மடியில்...
கண்டேன் இவ்வனைத்தும் அந்தோர் நொடியில்!

No comments: