Thursday, December 20, 2007

அவள் ஒரு தொடர்கதை...

கருவறையில் தொடங்கி,
குழந்தையாய் இன்னல்களைக் கண்டு,
சிறுமியாய் துன்பங்களைத்தாண்டி,
மங்கையாய் பாரங்களைச்சுமந்து,
மருமகளாய்ப் பொறுப்புக்களை ஏற்று,
மனைவியாய் குடும்பத்தைக்கய்யாண்டு,
தாயாய் வலிகளைத்தாங்கி,
முதுமையிலும் சோர்வடையாமல்,
நிமிர்ந்து நின்றதவள் நம்பிக்கை ...
அப்பெண்ணின் வாழ்க்கையோர் சகாப்தமே!

No comments: