Thursday, January 17, 2008

இன்னல் துடைத்த மின்னல்

உதயம் முதல் அஸ்தமம் வரை,
தினம் தினம் வாழ்வில் எத்தனை இன்னல்கள்!
கதறினேன் ஆனால் காணவில்லை,
என் துக்கங்கள் தாங்க இரு தோள்கள்.
மனதின் பசியோடு அலைந்தேன் தேடி உணவினை,
ஓர் நாள் வாழ்வினில் எத்தனை செலவுகள்!
சோர்வடைந்து சாய்ந்தேன் கோயில் வாயினில்,
ஏங்கியே வேண்டினேன் மகிழ்ச்சி காண சில வரவுகள்!
தோன்றியது ஓர் ஒளி கருணையால்,
கண்டதேன் விழி நற்பாதைக்கொரு வழி...
கைகோர்த்து நடந்தேன் சுமை பகிர்ந்த என் துணையின் பிடியில்.

No comments: